பிரான்ஸில் அறு மாத கற்பவதியான பெண்ணை வேட்டை நாய்கள் கடித்துக்குதறி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் வடக்கு பகுதியில் உள்ள வில்லர் கோட்டேரெட்ஸ் நகரை சேர்ந்த 29 வயது கர்ப்பவதியான எலிசா பிலார்ஸ்கி கடந்த சனிக்கிழமை அங்குள்ள வனப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த 5 நாய்களையும் தன்னுடன் அழைத்து சென்றார்.
அப்போது மான்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வேட்டை நாய்கள் அந்த கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தின.
உடனடியாக தனது கணவரை கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வேட்டை நாய்களிடம் மாட்டிக்கொண்டதாக அப்பெண் கூறினார். இதனையடுத்து கணவர் உடனடியாக அங்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் வேட்டை நாய்கள் அந்த பெண்ணை கடித்துக்குதறி கொன்று விட்டன.
அந்த பெண்ணின் வளர்ப்பு நாய்கள் அவரது உடலின் அருகே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையை நடத்தி வருகின்றனர்.